நடிகை டிஸ்கோ சாந்தி இப்படியொரு அதிர்ச்சி முடிவை எடுத்தாரா..?


தமிழ் திரையுலகில், கவர்ச்சி நடனங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார். தமிழில் ‘உதய கீதம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் சில திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தன்னுடைய காதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இவரின் கணவர் மரணம். நடிகர் ஸ்ரீஹரி கடந்த 2013 ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார். ஸ்ரீஹரி நடிகர் விஜய் நடித்த, வேட்டைகாரன் படத்தில் நேர்மை தவறாத போலிஸ் அதிகாரியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த டிஸ்கோ சாந்தி தன்னுடைய கணவரின் இழப்பை தாங்க முடியாமல் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் இவரை குடும்பத்தினர் சிங்கப்பூர் அழைத்து சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். பின் டிஸ்கோ சாந்தி முற்றிலும் குணமடைந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் பண கஷ்டத்தால் மிகவும் அவதி பட்டு வருவதால் மீண்டும் திரையுலகில் கால் பதிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் நல்ல கதை மற்றும் கதாப்பாத்திரம் அமைந்தால் மட்டுமே இவர் நடிப்பார் என கூறப்படுகிறது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!