பிக்பாஸ் வீட்டில் ஜனனி ஐயர் தான் அடுத்த காயத்ரியா..?


பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்போது ஆரம்பமாகியுள்ளது. நிகழ்ச்சியில் முதல் நாளே கலகலகப்பாக இருந்தது. போட்டியாளர்கள் பலரும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். கலாட்டாக்களும் கச்சேரிக்களும் தொடங்கிவிட்டது.

பிக் பாசில் முதல் சீசனின் பங்கேற்ற காயத்ரி, பார்வையாளர்களால் அதிகமாக விமர்சிக்கபட்டார். “தினமும் கேமரா முன்னால் போய் நடிக்கிறார் ஓவியா” என்கிறார் சினேகன். அடுத்தபடியாக காயத்ரி ரகுராம் “சேரி பிஹேவியர்” என்று ஓவியாவை சொன்னதிலிருந்து காயத்ரியின் வசனத்தின் இடையில் பீப் சத்தம். காயத்ரியின் உரையாடல்களை மட்டும் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோ தரத்தில்நிதானமாக சில முறை கவனமாக கேட்டு தணிக்கை செய்துவிட்டுதான் இணைக்க வேண்டும் போல. பாவம், பிக் பாஸ் நுட்பக்குழுவிற்கு கூடுதல் சுமையைத் இருந்தார் காயத்ரி.

இப்படி இருக்கையில், நேற்று முன்தினம் தொடங்கிய பிக் பாசின் இரண்டாம் பாகத்தில்,முதல் நாள் டாஸ்கின் படி வேட்பாளராக மஹத், ஜனனி, மும்தாஜ் ஆகியோர் இடம் பெற்றார்கள். பின் அதிக ஆதரவுகள் பெற்று ஜனனி தலைவரானார். மேஜையில் அமர்ந்து பேசுகையில் காமெடி நடிகர் டேனியல் ஜனனி ஐயருக்கு”விஷ பாட்டில்” என்று பெயர் வைத்திருக்கிறார்.

அதுவும் ஜனனியின் முன்னிலையிலேயே அவரை விஷம் என கலாய்க்கின்றனர் பாலாஜியும், டேனியலும். இது விஷ பாட்டில் பார்க்க அழகா இருக்கும். சாப்பிட்டா அவ்வளவு தான். என பாலாஜி கூற அனைவருடனும் சேர்ந்து ஜனனியும் சிரிக்கிறார். தற்போது சக போட்டியாளர்களுடன் சிரித்து மகிழ்ந்துகொண்டிருக்கும் ஜனனி ஐயர் அடுத்த காயத்ரி ரகுராமாக உருவெடுப்பாரா?பெர்சோ பொறுத்திருந்து பார்க்கலாம்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!