இலங்கை அதிபரைச் சந்தித்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் – உதவிகள் வழங்க இணக்கம்..!!


சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியோ ஹடோயாமா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்கும், சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு, முன்னாள் ஜப்பானிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

17 மாடிகளைக் கொண்ட தம்ம சேவை கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டுவதற்காகவே, ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியோ ஹடோயாமா சிறிலங்கா வந்துள்ளார்.

இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கு யுகியோ ஹடோயாமா தனது சொந்த நிதியில் இருந்து 2.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

இந்த நிலையத்தில், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளைப் பெருமளவு மாணவர்கள் கற்று வருகின்றனர்.

இங்கு தொழிற்பயிற்சி மையம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.source-puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!