சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆபத்து – காலா இயக்குனரை திட்டிய இலங்கை அமைச்சர்..!


தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்திற்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக சிறிலங்கா பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கபாலி, காலா படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டாம் என ரஜினிடம் அவர் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷிடமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் ரஜினியின் தீவிர ரசிகர் எனவும், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டாரின் சுயரூபத்தை வீணடிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஜினி – பா.ரஞ்சித் இயக்கத்தில் திரைப்படம் உருவானால் அதற்கு எதிர்ப்புகளுக்கு அவசியம் இருக்காது. இயக்குனரே எதிரியாக ரஜினியின் கதாபாத்திரத்தை வீணடிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தை தான் அதிக நேசிப்பதாகவும், தான் அவரை எடுத்துக்காட்டாக எடுத்து கொண்டிருப்பதாகவும், இதனால் ரஞ்சித்தின் படத்தினால் ரஜினிக்கு உரிய இடம் கிடைக்காதென்பது குறித்து தான் உட்பட ரஜினி ரசிகர்கள் வருத்தம் வெளியிடுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.-Source: paristamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!