3 மனைவிகள்… 2 ஆயிரம் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கோடீஸ்வரருக்கு நேர்ந்த சோகம்..!


இங்கிலாந்தில் இரவு விடுதி நடத்தி வரும் பீட்டர் ஸ்டிரிங்பேலோ என்ற கோடீஸ்வரர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது 77-வது வயதில் மரணமடைந்துள்ளார்.இவர் மரணம் என்பது ஒரு செய்தியல்ல. ஆனால் இவர் தனது வாழ்நாளில் 2 ஆயிரம் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார் என்பதுதான் அதிர்ச்சி செய்தி.

பீட்டர் ஸ்டிரிங்பேலோ என்ற கோடீஸ்வரர் பீட்டர் ஸ்டிரிங்பேலோ இங்கிலாந்தில் பல இடங்களில் இரவு விடுதிகள் நடத்தி வந்தார். இவர் பெண்கள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவராக திகழ்ந்தார்.

பீட்டர் ஒரு முறை அளித்த பேட்டியில் தான் இதுவரை 2000 பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் என கூறி பலரையும் அதிர வைத்தார். இவருக்கு மூன்று முறை திருமணமாகி மூன்று மனைவியையுமே பிரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பீட்டருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதை வெளியுலகிலிருந்து பீட்டர் மறைத்தார். பின்னர் இது கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியுலகுக்கு தெரியவந்தது.

சில காலமாக நோய் முற்றியதால் பீட்டர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்னர் பீட்டர் உயிரிழந்துள்ளார்.

பீட்டருக்கு பல விஐபி-க்கள் நட்பாக இருந்துள்ளதால் அவர்கள் அனைவரும் அவர் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!