யாழ் வரணி அம்மன் ஆலயத்தில் தேர் இழுப்பதில் சாதிப் பாகுபாடு… பின்ணனியில் நடந்த அதிர்ச்சி..!


யாழ் வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் முதன்முறையாக சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்றதாக அறியமுடிகிறது.மேலும் இது குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவமானது சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.-Source: newsvanni

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!