பட தயாரிப்பாளர் மீது மேலும் 3 நடிகைகள் கற்பழிப்பு புகார்

பிரபல ஆலிவுட் சினிமா பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டது. அதை தொடர்ந்து பிரபல ஆலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோஸி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செக்ஸ் புகார் கூறினர்.

இதனால் கைது செய்யப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர்மீது மேலும் 3 நடிகைகள் செக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மெலிசா தாம்சன்.

கடந்த 2011-ம் ஆண்டு சந்திக்க சென்ற போது அவர் தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். அவரைப் போன்று மேலும் கேட்லின் துலானி, லாரிசா கோம்ஸ் ஆகிய 2 நடிகைகளும் அவர் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளனர். விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து தங்களுடன் செக்ஸ்சில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.-Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.