கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!


வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவாலேயே தனது மனைவி மற்றும் வயிற்றில் இருந்த சிசுவையும் இழந்து நிற்பதாக, குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு உயிரிழந்துள்ள குறித்த கர்ப்பிணிப் பெண், 24 வயதான மிலானி பெரேரா எனும், கொழும்பு 15 புளுமென்டல் வீதியில் வசிப்பவராவார். இவர், வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 19ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியர் மற்றும் தாதியின் கவனக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு நியாயமான விசாரணை அவசியம் என உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களுக்கு அமைய வைத்தியர்கள் மற்றும் தாதிகளின் பக்கத்தில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதா எனும் கோணத்தில் மருதானை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.-Source: virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!