சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!!


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேறபட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் வரையில் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.source-tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!