பிரபல இயக்குனர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி… !


பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா, சினிமாவில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமா அதிக அளவு தூக்கு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. குறிப்பாக நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான்.

மேலும் கடந்த நடிகை நித்யா மேனன், மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான ‘ஒக்க அம்மாயி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை.

இந்நிலையில் இவர், மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இவரை உடனடியாக மருத்துவனையில் அனுமதித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, சினிமாவில் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக ‘ராஜசிம்ஹா’ மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் திடீர் என இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!