தன்னை வளர்த்த உரிமையாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாய், பார்ப்பவர்களின் இதயத்தை உருக வைத்துள்ளது.
உத்ரகாண்ட் மாநிலம், தெஹ்ரி எனும் பகுதியில் பக்வதி பிரசாத் ஜோஷி என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னுடன் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்தார். இதனை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக பாவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த நாய்க்கும், அவருக்கும் இடையே ஒரு அன்பான பிணைப்பு ஏற்பட்டது. அதனால் நாய், பக்வதியுடனே எப்போதும் சுற்றி திரிந்து வந்துள்ளது.
இந்நிலையில், பக்வதி பிரசாத் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துள்ளார். அவரது இறப்பு குடும்பத்தாருடன், அவர் வளர்த்த செல்ல நாய்க்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், பக்வதியின் உடலை அவரது குடும்பத்தார் இறுதி அஞ்சலி செலுத்துவதுக்காக வைத்திருந்தனர். அப்போது அந்த நாயும் அவர்களுடன் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
மேலும் அந்த நாள் முழுவதும் பக்வதியின் உடலுக்கு மிக அருகிலேயே சோகமாகப் படுத்துக்கொண்டிருந்தது.
இதுமட்டுமின்றி, கடைசி வரை தண்ணீர், உணவு என எதுவும் புசிக்காமல் தன்னுடைய நன்றி கடனை அவருக்கு செலுத்தியது.
நாயின் இந்த நன்றி விசுவாசம் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.-Source: tamil.eenaduindia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!