மனைவி கொடுத்த புகார் – பாட்டு பாடி மயக்கிய கணவர்! காவல் நிலையத்தில் சுவாரஸ்யம்…!!


உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது.

இதன் காரணமாக அந்த பெண் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

விசாரணையின் போது தம்பதிகள் தனிதனியாக ஆஜராகி இருந்தனர்.

அப்போது கணவர் அவரது மனைவிக்கு பிடித்தமான பாடலை பாட, அந்த பெண் அவரது கணவர் தோளில் சாய்ந்துக்கொண்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!