தேர்வு எழுத மணக்கோலத்தில் வந்த மாணவி..! குவியும் பாராட்டுக்கள்..!


கர்நாடகா மாநிலம் மாண்ட்யா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருபவர் காவியா. இவருக்கும், லோகித் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர்.

இந்நிலையில், திருமண தேதியில் தேர்வு அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்காக தேர்வை கைவிட மனமில்லாத காவியா, தான் நிச்சயம் தேர்வு எழுத வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காலை 9.15 மணிக்கு மணக்கோலத்தில் தேர்வறைக்குச் சென்ற காவியா, 11 மணிக்குள் தேர்வை முடித்துவிட்டு, குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் திருமணமும் செய்துகொண்டார்.

ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தினமாக கருதப்படும் திருமண நாளிலும், தனது படிப்பின் மீது இருந்த ஆர்வம் மற்றும் மரியாதையால் தேர்வு எழுத வந்த காவியாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!