குருநாகலை – ரிதிகம, கிரிபத்கல்ல பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸாரால் இன்று தம்பதிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள தம்பதிகளது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் 34 மற்றும் 29 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் பல கோணங்களிலும் தங்களது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.source-virakesari
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி