மலேசியாவிலிருந்து டேங்கர் கப்பலில் தப்ப முயன்ற 131 இலங்கை அகதிகள் அதிரடி கைது..!


கடந்த மே 1ஆம் தேதி Tanjung Gemuk என்ற பகுதியில், இலங்கை அகதிகள் தப்பிச் செல்ல முயன்றதாக மலேசிய காவற்துறை தனது அறிக்கையில் உறுதிச் செய்துள்ளது.

அதில் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள் அடங்குவர். இவர்கள் சிங்களவர்களா?அல்லது ஈழத்தமிழர்களா? என்பது உறுதிச் செய்யப்படவில்லை.

இக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ‘Etra’ என்ற டேங்கர் கப்பலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த இலங்கையர்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும், அதிலிருந்து 3 இந்தோனேசியர்களும், 4 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு மத்தியிலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா என சர்வதேச தொடர்புகளுடன் இந்த ஆட்கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகிறது.

போர்ச் சூழல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடல் வழியாக தஞ்சமடைய முயற்சித்தனர்.

ஆட்கடத்தல் தொடர்பாக மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சமீப மாதங்களில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.-
Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!