இளம் பெண்ணை தூணில் கட்டி வைத்து சரமாரியாக அடித்த கொடூரம்… அதிர வைத்த காரணம்..!


பீகார் மாநிலத்தில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில் வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு தலையாய் காதலித்தார் என குற்றம்சாட்டி இளம் பெண் ஒருவரை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து துவைத்தெடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் பேட்டியா இயற்கை எழில் மிகுந்த அழகான கிராமம். இந்த கிராமத்தில் வித்யா என்னும் இளம் பெண் வசித்து வருகிறார். இவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த பொது மக்களும், இளைஞர்களும் அங்குள்ள பொது சாவடியில் உள்ள தூணில் கட்டி வைத்து சரமாரியாக கட்டையால் அடித்து தாக்கினர்.

அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அந்த இளம்பெண் மயங்கி விழுந்தார்.

அந்த இளம் பெண் செய்த குற்றம் என்ன தெரியுமா ? அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஜாதி வாலிபரை இளம்பெண் வித்யா காதலித்துள்ளார். அதுவும் ஒரு தலையாக. வித்ய ஒரு தலையாக காலித்தது வேறு ஜாதியைச் சேர்ந்த அந்த இளைஞருக்குக் கூட தெரியாது.

பின்னர் எப்படி இந்த ஒரு தலைக்காதல் தெரியவந்தது தெரியுமா? வித்யா தனது செல்போனில் அந்த வேறு ஜாதி இளைஞரின் புகைப்படத்தை வைத்திருந்தார். இதற்கு தண்டனைதான் அவரை கிராம மக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி காவல் துறையினர் பேட்டியா கிராமத்துக்குச் சென்று வித்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டிஜிட்டல் இந்தியாவில் காதலித்தால் பாவம் என நினைக்கும் அறிவிலிகளும் இருந்து கொண்டதான் இருக்கிறார்கள்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!