பெற்ற மகளை தூக்கத்திலே கற்பழித்த தந்தை – 6 மாதமாக வீட்டில் வைத்து நடந்த கொடூரம்..!


பெற்ற மகளை (16 வயது) கடந்த 6 மாதமாக தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் ரிக்ஷா தொழிலாளி. மேற்கு வங்க மாநிலத்தில் ரிக்ஷா ஓட்டிவரும் இவருக்கு மனைவி ஒரு மகள் இருந்துள்ளார். கடந்த வருடம் இவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். மனைவியின் மறைவிற்கு பிறகு மகளோடு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய செய்துள்ளார். அப்போது மகள் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்ட பொது அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து 16 வயது சிறுமியை மீட்டனர். துணி கிழித்தும், உடம்பில் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அப்போது, அந்த சிறுமியிடம் விசாரிக்கையில், கடந்த 6 மாதமாக தனது தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி அந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.

இது குறித்து காவல் நிலைய போலீசார் ரிக்ஷா தொழிலாளியை கைது செய்து விசாரிக்கின்றனர். அப்போது தனது மகளை கடந்த ஆறு மாதமாக பெற்ற மகளையே தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கற்ப்பழித்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தான் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்தது தெரியவந்துள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!