நண்பனின் வீட்டில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த கொடூரம்..!!


தனது டெப் கணினிக்கு, வீடியோ கேம் ஒன்றைப் பதிவேற்றம் செய்துகொள்வதற்காக, நண்பனுடைய வீட்டுக்குச் சென்ற 13 வயது சிறுவனொருவனை நிர்வாணப்படுத்தி, அச்சிறுவன் கொண்டுவந்த டெப் கணினியில் வீடியோப் பதிவேற்றம் செய்துவிட்டு, அவனது நண்பன் உட்பட நான்கு சிறுவர்கள் இணைந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவமொன்று, மாத்தறை – கும்புறுப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும், சிறு வயதினர் எனவும் விசாரணைகளுக்காக அவர்களைக் கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வழங்கிய தகவலுக்கமையவே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்புணர்வுக்குப் பின்னர், இது தொடர்பில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென, மேற்படி சிறுவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 – 16 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் நால்வரையும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.source-tamilmirror

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!