வெப்பம் அதிகமாக உள்ளதால் குளிர்மைக்காக ஆசிரியர் மது அருந்தினார் ஆனால் அவர் குடிகாரர் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெப்பம் அதிகமாக உள்ளதால் குளிர்மைக்காக ஆசிரியர் மது அருந்தினார் ஆனால் அவர் குடிகாரர் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (26) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் இதன்போதே ஆஜராகிய மூத்த சட்டத்தரணி மேற்கண்டவாறு கூறினார்.
“ஆசிரியர் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார். அவர் தீவகத்தில் பணியாற்றுகிறார். அதிக வெப்பநிலை காரணமாக குளிர்மைக்காகவே அன்று அவர் மது அருந்தினார். ஆனால் தினமும் மதுப்பழக்கமுள்ள குடிகாரர் இல்லை” என்று மூத்த சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
எனினும் ஆசிரிருக்கு 7,500 ரூபா தண்டம் விதித்ததுடன் 1,500 ரூபா அரச செலவாக அறவிடுமாறும் மன்று உத்தரவிட்டது. மேலும் ஆசிரியரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை 9 மாதங்களுக்குத் முடக்கி வைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு மன்று உத்தரவிட்டது.source-newjaffna
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி