பிஸ்கட் வாங்க சென்ற 6 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் பலாத்காரம்… ஒடிசாவில் பயங்கரம்..!


தேசத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பால் அதிர்ச்சியடைந்த மகளிர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இதனையடுத்து பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

அவசர சட்டத்திற்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள். கட்டாக் மாவட்டம் ஜெகன்நாத்பூர் கிராமத்தில் நேற்று மாலை பிஸ்கட் வாங்க வீட்டை விட்டு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்து உள்ளது. சிறுமி நீண்ட நேரம் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடி உள்ளனர். கிராம மக்களும் தேடி உள்ளனர். அப்போது சிறுமி பள்ளி வளாகத்தில் ஆடையின்றி, தலை மற்றும் வாய் பகுதியில் ரத்தத்துடன் கிடந்து உள்ளார்.

உடனடியாக சிறுமியை அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமிக்கு மிகவும் மோசமான நிலையிலே சிகிச்சை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுமியின் தலை, முகம், மார்பகம் ஆகிய பகுதிகளில் ஆழமான காயங்கள் இருக்கிறது எனவே மோசமான நிலையில்தான சிகிச்சை நடைபெற்று வருகிறது என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுமிக்கு தேவையான சிகிச்சையை வழங்க மாநில அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்கிடையே போலீசும் தீவிரமாக விசாரித்து வருகிறது. கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபரை கைது செய்து உள்ளது. சிறுமி உயிரிழக்க பள்ளியிலே விட்டு செல்லப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று கேந்தராபாரா மாவட்டத்தில் தெகிரி கிராமத்தில் 4 வயது சிறுமி மைனர் பையனால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளார். இதுதொடர்பாக சிறுவனை போலீஸ் கைது செய்து உள்ளது. இரு சம்பவங்களிலும் பல்வேறு பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!