செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லையா..? நடிகை ஸ்ரீரெட்டி சொன்ன யோசனை..!!


தெலுங்கு திரை உலகின் அந்தரங்க வி‌ஷயங்களை அம்பலமாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இவரின் வாயை மூட நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. அதையும் ஸ்ரீரெட்டி, “என்னுடைய வாயை மூட வைப்பதற்கு ரூ.10 கோடி பேரம் பேசினார்கள். பிரபலங்களை அனுப்பி சமாதானம் செய்தார்கள்” என்று உண்மையை போட்டு உடைத்தார்.

நடிகர் ராஜசேகருக்கு அவருடைய மனைவி ஜீவிதாவே பெண்களை அனுப்பி வைத்ததாக சமூக ஆர்வலர் சந்தியா தெரிவித்தார். “இது உண்மை தான். அதற்கு ஆதாரம் தன்னிடம் இருக்கிறது” என்று ஸ்ரீரெட்டி கூறினார். இந்த நிலையில், காஷ்மீர் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீரெட்டி, வெளியிட்டுள்ள வீடியோவில், ‘செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்தான் இதுபோன்று சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள். எனவே, அரசாங்கம் சிவப்பு விளக்கு பகுதிகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் கற்பழிப்பு கொலைகள் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது’ என்று அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!