பிரித்தானிய மஹாராணியின் விசேட விருந்தில் இலங்கை ஜனாதிபதி..!!


பிரித்தானிய மஹாராணியின் விசேட இராசப் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

பக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். மஹாராணியின் விசேட பிரதிநிதி ஒருவரினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.source-tamilvin

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி