கைகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததற்காகவா போலீசார் இப்படி செய்தார்கள்…!


மாகராஷ்டிரா மாநிலம் மும்பை மலாத் பகுதியில் உள்ள சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் பெண் ஒருவர் தனது 7 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த போகுவரத்து காவல் துறையினர் சாலையில் நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணின் காரை இடையூறாக இருக்கிறது என கூறி டோ செய்து எடுத்துள்ளனர்.

இதனை பார்த்த அந்த தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் காரை டோ செய்ய வேண்டாம் என கெஞ்சியுள்ளார். ஆனால் போலீசார் அவரின் பேச்சை கேட்காமல் காரை இழுத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஒருவர் விடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக அந்த போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!