பிரபல டிவியில் களைகட்டும் ஆர்யா திருமணம்… சினேகா தெரிவு செய்தது யாரை..?


பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரம்பத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்தாலும் அதன் பின்பு மக்களுக்கு இந்நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது சுசானா, அகாதா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர். இதில் வெற்றி பெறுபவரைத் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.

திருமணத்திற்கு முன்பு நடக்கும் மெஹந்தி நிகழ்வும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது திருமணத்திற்காக பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் பிரசன்னாவுடன் சினேகாவும் வந்துள்ளார். அவர் கூறுகையில், இந்த மூன்று பேரில் ஆர்யாவிற்கு ஜோடியாக யார் வந்தாலும் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஆர்யா சீதாலட்சுமியைத் தான் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.-Source: lankasee

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!