8 வயது சிறுமியை கடத்தி சிறை வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற மிருக கும்பல்..!


ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கத்துவா பகுதியில் ஜனவரி 10-ம் தேதி குதிரை மேய்க்க காட்டுப்பகுதிக்கு சென்ற 8 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். காணாமல் போன சிறுமி கத்துவா பகுதியில் வசிக்கும் நாடோடி வகுப்பை சேர்ந்தவர். சிறுமியை பெற்றோர்கள் தேடியும் கிடைக்கவில்லை. சிறுமியிடன் சடலம் ஜனவரி 17-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.

கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 8 பேர் அந்த சிறுமியை கடத்தி சென்று அங்குள்ள கோவிலில் சிறைவைத்து, மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் 8 பேரை கைது செய்து உள்ளனர். கைதானவர்கள் குற்றமற்றவர்கள் என பா.ஜனதா ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மன்ச் என்னும் அமைப்பு போராட்டங்கள் நடத்தியது. போராட்டங்களில் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து உள்ளது. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய போலீஸ் வந்தபோதும் வழக்கறிஞர்கள் மற்றும் பிறதரப்பில் இருந்து மோதல் சம்பவம் நடைபெற்றது.

குற்றப்பத்திரிக்கையில் மிருகங்களால் சிறுமிக்கு நடந்த கொடூரம் தொடர்பான தகவல்கள் விவரிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்று உள்ள தகவல்கள் நெஞ்சை உடைய செய்யும் வகையில் உள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயக்கமருந்து, பாலியல் பலாத்காரம் கொடூரமான கொலை என்பதில் முக்கிய குற்றவாளி முன்னாள் அரசு அதிகாரி சஞ்ஜி ராம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிக்கை சிறுமிக்கு சொல்ல முடியாத வகையில் நடந்த கொடூரத்தை விவரிக்கிறது. இதற்கிடையே ஜம்மு பிராந்தியத்தில் மதரீதியிலான பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ராசானா கிராமத்தில் சிறுமியை சேர்ந்த சமூதாயத்தை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கில் சஞ்ஜிராம் இந்த செயலுக்கு திட்டமிட்டு உள்ளான் என்றும் இதற்கு முக்கிய குற்றவாளியாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவன் இருந்து உள்ளான் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இவ்வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 19 வயது ஆகிவிட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவன் சிறுவன் என கூறப்படுகிறது. இதனை கோர்ட்டுதான் இனிமுடிவு செய்ய வேண்டும் என்ற நிலையானது உள்ளது.

இதற்கிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சம்பவத்தை திசைதிருப்ப போலீசுக்கும் பணம் கொடுத்ததும் தெரியவந்து உள்ளது.

சஞ்ஜிராம் நிர்வாகம் செய்யும் தேவஸ்தானத்தில் வைத்துதான் சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்து உள்ளது, சிறுமி 6 நாட்கள் தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். சிறுவன் தான் அவரை கடத்துவதற்கு முக்கிய கருவியாக செயல்பட்டு உள்ளான். சிறுமியின் குதிரைகளை கண்டுபிடித்து தருவதாக ஏமாற்றி கடத்தி உள்ளான், அவரை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததில் அவன் தான் முக்கிய பங்கு வகித்து உள்ளான் என்பதும் தெரியவந்து உள்ளது.

விசாரணையின் போது தேவஸ்தானத்தில் இருந்து முடிகள் எடுக்கப்பட்டு உள்ளது, சிறுமியின் சடலம் வீசப்பட்ட காட்டுப்பகுதியில் இருந்தும் முடிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் டெல்லிக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விசாரணை தொடரும் நிலையில் விரிவான சிபிஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என முதல்-மந்திரி மெகபூபா முப்தி வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடைபெற்று வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!