யாழ் பட்­ட­தா­ரி­க­ளுக்கான நேர்­மு­கத் தேர்வு 16 இல் ஆரம்­பம் – மாவட்­டச் செய­லர்


யாழ்ப்­பாண மாவட்ட வேலை­தே­டும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்வு எதிர்­வ­ரும் 16ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­க­வுள்­ளது என்று மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளில் 20 ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்­புக்­காக 2 ஆண்­டு­கள் பயிற்சி அடிப்­ப­டை­யில் நிய­ம­னம் வழங்­கு­வ­தற்­காக எதிர்­வ­ரும் 16ஆம் திகதி முதல் நேர்­மு­கத் தேர்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

நேர்­மு­கத் தேர்­வுக்­கான அழைப்­புக் கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் பல பட்­ட­தா­ரி­கள் குறித்த பதி­வு­களை மேற்­கொள்ள தவ­றி­யமை சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இதன் அடிப்­ப­டை­யில் 2016 ஆம் ஆண்டு டிசெம்­பர் 31ஆம் திக­திக்கு முன்பு பட்­டப்­ப­டிப்­புக்­களை நிறைவு செய்­தும் ஏற்­க­னவே தமது பதி­வு­களை மேற்­கொள்­ளத் தவ­றிய அனை­வ­ரும் எதிர்­வ­ரும் 20ஆம் திக­தி­வரை தமது பதி­வு­களை மாவட்­டச் செய­ல­கங்­க­ளில் மேற்­கொள்ள முடி­யும் – என்­றார்.source-uthayan

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி