கவர்னர் மாளிகைக்கு வெளியே வைகோ கருப்புக்கொடி காட்டி போராட்டம்..!


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது. சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. பல்வேறு பகுதியில் வீடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி கட்டப்பட்டு உள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை கவர்னர் மாளிகைக்கு வெளியே கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார். மதிமுக தொண்டர்கள் கவர்னர் மாளிகைக்கு வெளியே கருப்புக்கொடி மற்றும் பலூன்களுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!