போக்குவரத்து விதிமுறையை மீறிய பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்..!!


குருணாகலில் பாடசாலை மாணவர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் துரத்தித் துரத்தி தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குருநாகல் பகுதியை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் மென்பந்து போட்டியை முன்னிட்டு குறித்த பாடசாலையின் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.எனினும், கண்டி – குருணாகல் பிரதான வீதியில் தடை ஏற்படுத்தும் வகையில் இந்த மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக கோபம் கொண்ட பொலிஸ் அதிகாரி அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.source-tamilwin

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி