படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் தாய்! – நியூசிலாந்தில் நடந்த வெறிச் செயல்..!!


நியூசிலாந்தில் வசித்து வந்த இந்திய நாட்டை சேர்ந்த இளம் வயது தாய் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

Arishma Archana Singh(24) என்ற பெண்மணிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கணவரை விட்டு இவர் பிரிந்துவிட்டதால் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது தோழியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிலிருந்த இவரது பெற்றோரும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் தனியா இருந்த அரிஷ்மா, உடலில் ரத்த காயங்களோடு தனது படுக்கையில் இறந்துகிடந்துள்ளார், வீட்டிற்கு வந்த இவரது பெற்றோர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

இந்த கொலை எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம், திருடர்கள் யாராவது பணத்திற்காக கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றும் இந்த கொலையில் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!