ஓடும் ரெயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல் – இரத்த வெள்ளத்தில் தாய்-மகள்..!!


கொல்கத்தாவில் இருந்து 40 வயது பெண் ஒருவரும் அவரது 15 வயது மளும் டெல்லி சென்றனர். அவர்கள் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.

அந்த ரெயில் சந்தரி மற்றும் கான்பூர் இடையே சென்று கொண்டு இருக்கும் போது சிறுமியை அந்த ரெயிலில் பயணம் செய்த சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். இதை தொடர்ந்து தாயும் மகளும் ஓடும் ரெயில் இருந்து குதித்து உள்ளனர்.

குதித்ததில் இருவரும் படுகாயம் அடைந்து, 2 மணி நேரம் மயக்க நிலையில் கிடந்து உள்ளனர். பின்னர் இருவரும் எழுந்து சந்தரி ரெயில் நிலையம் வந்துள்ளனர்.

தாயும் – மகளும் ரத்த வெள்ளத்தில் வருவதை பார்த்த மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் லால் லஜ்பத்ராய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து அந்த பெண் கூறியதாவது:-

ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டவுடன் அந்த ரெயிலில் இருந்த 10-15 பேர் என்னுடைய மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தனர்.

இரண்டு ரெயில் நிலையங்களில் ரெயில் நின்ற போது ரெயில்வே பாதுகாப்பு படையிடம் புகார் கொடுதேன். 3 பேரை போலீசார் பிடித்து சென்றனர். “ஆயினும், அந்த நபர்கள் 30 நிமிடங்களுக்குள் திரும்பி வந்தனர், ஒருவேளை போலீசாருக்கு அவர்கள் லஞ்சம் கொடுத்திருப்பார்கள்.

இதை தொடர்ந்து அவர்கள் மிகவும் ஆவேசமாக இருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், நான்கு முதல் ஐந்து ஆண்கள் பெண்கள் கழிவரை செல்லும் வழியில் நின்று கொண்டனர். என் மகள் செல்லும் போது அவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்தனர். இதனால் எனது மகள் கத்தினாள். என் மகள் அவர்களுடன் சண்டையிட்டாள். நானும் சென்று அவர்களுடன் சண்டையிட்டேன்.

எனது மகளின் ஆடைகள் முழுவதும் அகற்றப்பட்டன. எங்களுக்கு வேறு வழி இல்லாததால் நாங்கள் ரெயில் இருந்து குதித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!