தகாத உறவால் நடந்த கொடூரம் – இந்து வழக்கறிஞரின் உடல் கிடைத்தது – மனைவி அதிரடி கைது..!


வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து வழக்கறிஞர் ரதீஷ் சந்திர பவுமிக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர் மிக முக்கியமான வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜர் ஆகியிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததால் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரதீஷின் உடல் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து இன்று கிடைத்தது. உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் ரதீஷின் மனைவிக்கும், அவருடன் பணிபுரிபவருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர் மனைவி ரதீஷை கொலை செய்துள்ளார். இதையடுத்து ரதீஷ் மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!