கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவியால் அதிர்ச்சி – உ.பியில் தொடரும் அவலம்..!


உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண்ணின் கணவர் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரு காலை இழந்தார். இதனால் அவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிம்லா சென்றார்.

புகைப்படம் எடுப்பதற்காக பிம்லாவின் கணவர் வர வேண்டும் என்று கூறி விட்டனர். இதையடுத்து தனது கணவரை முதுகில் சுமந்து வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான வாகனம் இல்லாததால் நடந்து சென்றதாக பிம்லா தெரிவித்தார். சான்றிதழ் வாங்குவது மிகவும் அவசியம் என்பதால் அவரை முதுகில் தூக்கி வந்ததாக கூறினார்.

இதுகுறித்து பேசிய உ.பி. மந்திரி புபேந்திரா சவுத்ரி, கணவனை முதுகில் தூக்கிச்சென்றது மிகவும் மோசமான சம்பவம். இது போன்று பல சம்பவங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!