ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை… பின்ணனியில் அதிர வைத்த காரணம்..!


ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில் ராம் சிங் சிர்கா. இவர் இவது மனைவி பனு குயி, மகள் ரம்பா (17) மகன்கள் காண்டே (12), சோனியா (8) ஆகியோருடன் வசித்துவந்தார். ரம்பாவை தனக்குத் திருமணம் செய்துதருமாறு அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கெனவே திருமணமான நபர் ஒருவர் ராம் சிங்கை வற்புறுத்தியுள்ளார். அந்த நபரும் அவரது குடும்பமும் அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என கூறப்படுகிறது.

ஆனால் தமது மகளை ஏற்கெனவே திருமணமான நபருக்கு மறுமணம் செய்து வைக்க ராம் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ராம் சிங் குடும்பத்தை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் 14 ஆம் தேதி ராம் சிங் வெளியூர் சென்ற நிலையில் அவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் அங்கிருந்த ராம் சிங்கின் மனைவி, அவரது மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளிட்ட 4 பேரை கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் உடல்களை தூக்கி வீசி உள்ளனர்.. இந்த நிலையில் வீடு திரும்பிய ராம் சிங்கையும் அவர்கள் கொடூரமாக தாக்கி அதே வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.

இதனிடையே மார்ச் மாதம் 27 ஆம் தேதி 4 உடல்கலை வனப்பகுதியில் இருந்து கண்டெடுத்த போலீசார் , தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியை திருமணம் செய்து தர மறுப்பு தெரிவித்த காரணத்தாலையே இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ள நிலையில் எஞ்சிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!