தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மறியல் போராட்டம்..!


காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

இக்கூட்டம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பச்சைத்துண்டு அணிந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்டாலின், வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்றும் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் ஈரோடு பயணிகள் ரயிலை மறித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!