ஒரு வாரத்தில் கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமத்தை பெற இதை செய்தாலே போதும்..!


சருமத்தில் ஏற்படும் b பிரச்சினைகளில் முக்கியமானது கரும்புள்ளிகள். இதனை நீக்குவதற்கு பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்திய போதிலும் அதற்குரிய தீர்வை முழுமையாகப் பெற முடிவதில்லை.

ஆனால் இந்த இயற்கையான சிகிச்சை முறையினால் ஒரு வாரத்தில் கரும்புள்ளிகளில் இருந்து தீர்வைப் பெற முடியும்.

தேவையான சேர்மானங்கள்

கற்றாளைச் சாறு – 3 தேக்கரண்டி

விட்டமின் ஈ காப்ஸ்யூல் – 2

ரோஸ் நீர் – 2 தேக்கரண்டி

கிளிசறின் – ½ தேக்கரண்டி


பயன்படுத்தும் முறை

சிறிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி கற்றாளைச் சாற்றை எடுத்து, அதில் 2 தேக்கரண்டி Rose water மற்றும் ½ தேக்கரண்டி கிளிசரினையும் சேர்த்து, அந்தக் கலவையில் இரண்டு விட்டமின் ஈ Capsulesசேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்தக் கலவையை முகம் முழுவதும் 10 நிமிடங்கள் நன்றாக தடவி மசாஜ் செய்யவும்.

1மணி நேரத்தின் பின்னர் முகத்தை நீரில் கழுவவும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

கற்றாளைச் சாற்றை பாதிக்கப்பட்ட சருமம் குணமடைய உதவுவதுடன் தொற்றுக்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றது. Rose Water கரும்புள்ளியின் நிறத்தினை குறைக்க உதவுகின்றது.

விட்டமின் ஈ மற்றும் கிளிசரின் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!