குழந்தை பெற்ற 20 நாளில் பெண் தூக்கிட்டு தற்கொலை..! கூடலூரில் அதிர்ச்சி..!


தேனி மாவட்டம் கூடலூரில் குழந்தை பெற்ற 20 நாளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திருக்கிறது. வரதட்சணைக்காக கொலை செய்துவிட்தாக கூறி குமிளி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது மனைவி பிரியா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

கம்பம் அரசு மருத்துவமனையில் திரண்ட பிரியாவின் உறவினர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கணவரை கைது செய்ய கோரியும் அரசு மருத்துவமனை முன்பு குமிளி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரியாவின் கணவரை கூடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!