கடந்த 2017 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சுமார் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
மேலும் இன்று வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் 969 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.-Source: virakesari
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!