யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு..!


யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டிய ஏற்பட்டுள்ளதை அடுத்து. இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று காலை சற்று முன்னர் ஆரம்பமானது.

இதன்போது, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஆர்னோல்டின் பெயரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரையும், ஈபிடிபி ரெமீடியசின் பெயரையும் முன்மொழிந்து, போட்டியில் நிறுத்தின.

இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!