வாரம் இரு முறை இப்படி செய்தால் கருமை நீங்கி முகத்தின் பொலிவு அதிகரிக்கும்..!


புளி என்பது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். அதே போல் இந்தப் புளியில் சத்துக்களும் அடங்கியுள்ளது.

வெறும் புளியை உபயோகித்தே பல்வேறு விடயங்களுக்கு தீர்வு காணலாம்.

புளியை முதன்மையாகப் பயன்படுத்துவது இக்காலத்தில் வேண்டுமானால் குறைவடைந்திருக்கலாம். ஆனால் பண்டைய காலத்தில் புளிக்கு மருத்துவருக்கு வழங்கும் மதிப்பை அளித்தார்கள்.

அது சரி, இந்த புளியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பார்ப்போம்!

01. புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

02. பலருக்கும் கழுத்தைச் சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.

03. புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

04. புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும்.

எனவே புளிச்சாற்றில் 1 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!