விமான நிலையத்தில் இலங்கை அதிபருக்காக காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்..!


சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.

இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது.

இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும், பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பிரதம விருந்திரமாக கலந்து கொள்ளவுள்ளார்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!