தங்கப் புதையலை தேடி சென்று வெறுங்கையுடன் திரும்பிய இலங்கை அரசு..!


இலங்கையில் உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் தங்கள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் தங்கக்கட்டிகளை மண்ணில் சுரங்கம் தோண்டி புதைத்து விட்டதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடும் நோக்கில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் புல்டோசர் மூலம் இன்று குழி தோண்டினர்.

மூன்று மணிநேரம் தோண்டிய நிலையில் குழிக்குள் இருந்து தண்ணீரே வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் தோண்டும் பணியை நாளை வரை ஒத்திவைத்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!