எண்ணெய்ப்பசை சருமத்தை உடையவர்கள் மேக்கப் போட முன் இத முதலில் படிங்க..!


பொதுவாக எண்ணெய்ப்பசையுடைய சருமம் கொண்டவர்கள் என்ன தான் அழகு பொருட்களைப் பயன்படுத்தி மேக்கப் செய்ய முனைந்தாலும் சிறிது நேரத்திலேயே எண்ணெய் பூசியது போல் முகம் மாறிவிடும்.

அதனால், எண்ணெய் சருமம் உடையவர்கள் முகத்துக்கு மேக்கப் போடுவதற்கு முன் ஐஸ் கட்டி ஒன்றை எடுத்து ஒரு துணியில் சுற்றி முகத்தில் பரவலாக ஒற்றி எடுக்க வேண்டும்
. பிறகு, உலர்ந்த டவல் கொண்டு முகத்தை மிக மென்மையாகத் துடைத்து முகம் உலர்ந்த பின் வழக்கமான மேக்கப்பைத் தொடரலாம்.


இவ்வாறு செய்வதால், மேக்கப் நீண்டநேரம் கலையாமலும் இருப்பதோடு எண்ணை பிசுபிசுப்பும் இருக்காது. முகமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அத்துடன் சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் இறுக்கமாக்கப்படும்.

இனிமேல் ஏதேனும் கொண்டாட்டத்திற்கு வெளியே செல்வதானால் உடனே ஐஸ் கட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!