50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி..!


பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவை ஒட்டியுள்ள ஆக்கிடெண்டல் மிண்டோரோ மாகாணம் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒரு குறுகிய பாலத்தை கடக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புகளில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்துக்கு டிரைவரின் கவனக்குறைவு காரணமா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!