இறுதி சடங்கிற்காக தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது நடராஜனின் உடல்!!


உடல் நலக்குறைவால் உயிரிழந்த ம.நடராஜனின் உடல், இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான ம.நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு ம.நடராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்பின் அவரது உடல், எம்பாமிங் செய்யப்பட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ம.நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார். இந்நிலையில் ம. நடராஜனின் உடல், அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிசடங்குகள் முடிந்த பின், அடக்கம் செய்யப்பட உள்ளது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!