அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமாவில் அஞ்சலி செலுத்திய மைத்திரி..!


ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஹிரோஷிமாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அங்கு, அணுகுண்டு வீச்சுக்குப் பலியானவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஹிரோஷிமா நகர முதல்வரும் சிறிலங்கா அதிபருடன் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!