ஆசிரமத்தில் உள்ள சாமியார்களுக்கு பணம் வழங்கிய ரஜினிகாந்த்…!


ரஜினிகாந்த் கடந்த 10-ந் தேதி இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றார்.

அங்கு பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு சென்று ரஜினி வழிபாடு நடத்தி வருகிறார். முக்கிய துறவிகளை சந்தித்து ஆசியும் பெறுகிறார்.

குகை கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். நேற்று ரஜினி ரிஷிகேஷ் சென்றார். அங்கு உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார்.

இன்று தயானந்தா ஆசிரமத்தில் உள்ள சாமியார்களை ரஜினி சந்தித்தார். அவர்களுக்கு தலா 100 ரூபாய் வழங்கினார். மூத்த ஞானிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

முன்னதாக அங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ரஜினி பங்கேற்றார். அவர்களுடன் உட்கார்ந்து தியானத்திலும் ஈடுபட்டார். ஆன்மீக பயணத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல இருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!