இளம் டிவி நடிகை தூக்குப்போட்டுத் தற்கொலை..!


கூக்ளி மாவட்டத்தின் பண்டேல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் டிவி நடிகை, தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மவுமிதா சஹா என்ற நடிகை தெற்கு கொல்கத்தாவின் ரீஜென்ட் பார்க்கில் உள்ள, ஒரு பிளாட்டில் தனியாக தங்கி டிவி சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்காததால், மனமுடைந்து விரக்தியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மகளுடன் பேசுவதற்காக அவரது பெற்றோர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து அழைப்பை நிராகரிக்கவே, அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.ஆகவே, உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர்.

அவரும் முயற்சி செய்து பார்த்துள்ளார், ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

தகவலறிந்து வந்த போலீசார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஃபேனில் தூக்குப்போட்டு இறந்தது தெரியவந்தது. உடனை போலீசார் அவரது அறையிலிருந்த தற்கொலைக்கான காரணக் கடிதத்தை எடுத்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடாமல், உடனே உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மர்ம இறப்பு குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து வீசாரனை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!