உறவுக்கு பிறகு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க..! பெண்களுக்கு மட்டும்..!


செக்ஸ் உறவின் முடிந்தாலும்,செக்ஸ் உறவின் போது வெளியாகும் திரவங்கள் உங்கள் விரல்கள்,உதடுகள் மற்றும் இனப்பெருக்க உறுப்பு ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும்.இவை உங்கள் உடலில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தக் கூடும்.எனவே இந்த உடல் பாகங்களை அதிக வாசனை இல்லாத சோப்பைக் கொண்டு கழுவுங்கள்.

செக்ஸ் உறவுக்கு பிறகு,சிறிதளவு தேங்காய் எண்ணெயைக் உடலில் தேய்த்துக் கொண்டு குளித்தால்,அந்தரங்க உறுப்பில் ஏற்படும் எரிச்சல்,வீக்கம் குறையும்.

செக்ஸ் உறவின் போது உங்கள் உடலில் அதிக அளவு நீர்ச்சத்து குறைந்திருக்கும்.எனவே உடலுறவு முடிந்ததும் இரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது.


ப்ரோ-பயாடிக் கொண்ட உணவுகளை,செக்ஸ் உறவுக்கு பின்னர் சாப்பிட்டால்,செக்ஸ் உறவின் போது இனப்பெருக்க உறுப்பு வழியாக வெளியேறிய நல்ல பாக்டீரியாக்கள்,மீண்டும் உடலில் சமன்படுத்தப்படும்.

செக்ஸ் உறவுக்கு பின்னர் பருத்தியினால் செய்யப்பட்ட,தளர்வான உள்ளாடைகளை அணிந்து தூங்கச் செல்லுங்கள்.நைலான் மற்றும் இறுகலான உள்ளாடைகளை அணிவது அந்தரங்க உறுப்பில் கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கும்.இதனால் பூஞ்சைத் தொற்று கூட ஏற்படும்.

செக்ஸ் உறவுக்கு பின்னர் பெண்கள் செய்யக் கூடாத சில விஷயங்களை இங்கு பட்டியலிடுகின்றோம்.


உடலுறவுக்கு பிறகு உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என பலர் கூறி கேட்டிருப்போம்.இது சிறுநீர் பாதை தொற்றை தவிர்க்க உதவும் எனவும் சிலர் கூறியிருப்பார்கள்.ஆனால் உடலுறவுக்கு பிறகு உடனே சிறுநீர் கழிப்பது மிகவும் அவசியமான ஒன்று அல்ல..

உடலுறவுக்கு முன்னர் ஒரு கிளாஸ் அளவிற்கு ஒயின் அருந்துவது,உங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்கும்.ஆனால் அளவுக்கு அதிகமாக அருந்தினால்,அது உடலுறவில் திருப்தியை குறைக்கும்.

உடலுறவுக்கு பிறகு பெண்கள் தங்கள் இடுப்புப் பகுதியை சற்றே உயர்த்தி வைத்திப் படுப்பது,விரைவில் கர்ப்பமடைய உதவும்.எனவே கர்ப்படைய விரும்பாதவர்கள்,இதனை செய்ய வேண்டாம்.


வாய்வழிப் புணர்ச்சியின் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்றால்,உடலுறவுக்கு முன்னர் கண்டிப்பாக குளிப்பது அவசியம்.

உடலுறவுக்கு முன்னர் அதிக அளவில் உணவு உண்ணாதீர்கள்.இது செக்ஸ் உறவின் போது உங்கள் செயல்பாட்டைக் குறைக்கும்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!