நரேந்திர மோடிக்கு ஆதரவாக புத்தகம் எழுதியவரை பாராட்டிய ரஜினி!


நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் மாரிதாஸ் என்பவரை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

பேஸ்புக்கில் அரசியல் விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வருபவர் இளம் அரசியல் விமர்சகர் மாரிதாஸ். இவர் தனது பெரும் வரவேற்பை பெற்ற பதிவுகளை தொகுப்பாக மாற்றி, ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற பெயரில் நேற்று புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த புத்தகத்தை பாஜக மாநிலச் செயலாளர் ராகவன் வெளியிட்டார்.

இந்த மோடியின் அரசியல், திட்டங்கள், செயல்பாட்டுக்கள் உள்ளிட்ட புள்ளி விபரங்களை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு நடிகர் ரஜினகாந்த் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்ற புத்தகத்தை எழுதிய மாரிதாஸை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டை தெரவித்துள்ளார். இதை மாரிதாஸ் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.-
Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!