டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஜெயக்குமார் இன்று டெல்லி சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2018 வரை ரூ.50 ஆயிரத்து 147 கோடி வசூலாகி இருக்கிறது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தின் நலன் பாதிக்காமல் வருவாய் கூடியுள்ளது.
கேள்வி:- ரஜினிகாந்த் இப்போது இமயமலைக்கு போய் இருக்கிறார். அவரது பயணம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்:- ஆன்மீக சாமி இப்போது மலை ஏறி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!